மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று ஏஅய்சிசிடியுவும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் பெண்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தின.

திருவள்ளூர்:செங்குன்றத்தில் தோழர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சூரியா, கலையரசி, வசந்தி, முத்துலட்சுமி, சுஜாதா, செய்யத் அலி பாத்திமா, அங்கம்மாள், ஜெய்சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தையல் தொழிலாளர் நிலைமைகள் பற்றிய ஏஅய்சிசிடியு வெளியீட்டை முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் சாந்தி வெளியிட சிறுகடை நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தோழர் ரம்ஜான் பெற்றுக் கொண்டார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத்தலைவர்கள் தோழர்கள் குப்பாபாய், தேவகி, மாநிலச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி உரையாற்றினர். அவிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், மாநிலச் செயலாளர் தோழர் க.ராமன், மாவட்டத் தலைவர் தோழர் மணி, அகில இந்திய மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சீதா உரையாற்றினர். இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் நிறைவுரையாற்றினார்.

நாமக்கல்:பள்ளிபாளைத்தில் மார்ச் 8 கூட்டம் தோழர் ராசாத்தி தலைமையில் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மலர்விழி, மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ் மற்றும் விசைத்தறி பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தையல் தொழிலாளர் நிலைமைகள் பற்றிய வெளியீட்டை படித்து விவாதித்தனர்.

திண்டுக்கல்: மார்ச் 8 அன்று ஏஅய்சிசிடியு நடத்திய கூட்டத்துக்கு தோழர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மணிவேல் கலந்து கொண்டார். திண்டுக்கல்லில் ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக்குவது என கூட்டம் உறுதியேற்றது.

சென்னை:மார்ச் 10 அன்று ஏஅய்சிசிடியு நடத்திய கூட்டத்துக்கு மாநிலச் செயலாளர் தோழர் முனுசாமி தலைமை தாங்கினார். தோழர்கள் லில்லி, தனலட்சுமி, விஜயகுமாரி, காந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, துணைத்தலைவர்கள் தோழர்கள் குப்பாபாய், தேவகி, ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர், மாநிலச் செயலாளர் தோழர் ஆர்.மோகன், மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கே.வேணுகோபால் உரையாற்றினர்.

நெல்லை:நெல்லையில் மார்ச் 11 அன்று தோழர் சுமதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அன்புச்செல்வி, பகுதிப் பொறுப்பாளர் தோழர் திலகவதி உரையாற்றினர். கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் உரையாற்றினர்.

Back-to-previous-article
Top